புதன், 4 பிப்ரவரி, 2015

வாழ்த்து - மாணிக்க வாசகர் பற்றிய குறிப்புகள்


  • சைவ சமயக்குரவர்  நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்,
  • திருவாதவூரில் பிறந்தவர். 
  • அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர். (863-911)
  •  திருபெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்.
  • அழுது அடியடைந்த அன்பர் என சிறப்பிக்கப்படுபவர்.
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்
  • திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியவை.
  • இவர் எழுப்பிய கோவில் தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
  • இவர் தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
  • சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும், திருக்கோவையாரும் உள்ளன.
  • திருவாசகத்தில் 658 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
  • திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் - ஜி.யு.போப்

     
  • சொற்பொருள் :மெய் - உடல்
    விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
    விரை - மணம்
    நெகிழ் - தளர
    ததும்பி - பெருகி
    கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
    சய சய - வெல்க வெல்க

    இலக்கணக்குறிப்பு :

     விடேன் - தன்மை ஒருமை வினைமுற்று

    பிறப்பு திருவாதவூர்
    இயற்பெயர் திருவாதவூரடிகள்
    சிறப்பு பெயர் தென்னவன் பிரமராயன்
    தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி
    இலக்கிய பணிகள் திருவாசகம் திருக்கோவையார்

1 கருத்து: